மடத்துக்குளம் அருகே, பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி ஏற்படுத்தி, மூன்று “108′ ஆம்புலன்சை அலைக்கழித்த நபரை, போலீசார் கைது செய்தனர். நேற்றுமுன்தினம் மதியம், மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவி அரசு நடுநிலைப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு, குழந்தைகள் சிலர் பாதிக்கப்பட்டதாக, இப்பகுதியை சேர்ந்த ஒருவர், “108′ ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி, குடிமங்கலம் மற்றும் உடுமலையை சேர்ந்த, “108′ ஆம்புலன்ஸ் வாகனங்கள், சோழமாதேவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போது, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது தெரிந்தது. தவறான தகவல் தந்த நபர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தினர். மடத்துக்குளம் போலீசார் நடத்திய விசாரணையில், வதந்தியை கிளப்பியது, சோழமாதேவியை சேர்ந்த சகாப்தீன் (34) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் இருந்த சகாப்தீனை, போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment